Friday 25 December 2015

13000 ஆண்டுகளாக சுற்றித்திரியும் மர்மமான 'கருப்பு பொருள்' பற்றிய பின்னணி..!

பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலம் ஆகும். 'கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்' என்று இது அழைக்கப்படுகிறது என்பதும், இது வேற்றுலகத்தை சார்ந்தது என ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம் (Black Knight satellite) ஆனது 13000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவதாக யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். இந்த மர்மமான 'பிளாக் நைட்' பற்றிய மேலும் பல தகவல்களை கீழ்வரும் ஸ்லைடார்களில் தொகுத்துள்ளோம். 

18-1450421320-maxresdefault.jpg

இப்படி ஒரு விண்கலம் :

1954-யில் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த செய்தியின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் புவியைச் சுற்றி வருகிறது என்பது தெரிய வந்தது. 

18-1450421315-gpn-2002-000182.jpg

வசதிகள் : 

விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகள் ஆனது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் வெளியான இந்த பிளாக் நைட் பற்றிய செய்தி தீயாய் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

18-1450421322-nasa-ufo-black-night.jpg

கருப்பு பொருள் :

மீண்டும் 1960-யில் அமெரிக்க கடற்படை இதே கருப்பு பொருள் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவதை கண்டறிந்தது . மேலும் இது சார்ந்த தீவிரமான ஆய்வும் தொடங்கப்பட்டது. 

18-1450421311-closeupblackknight.jpg

216 கி.மீ தூரம் : 

விசித்திரமான சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்று,ம் குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் கண்டறியப்பட்டது. 

18-1450421309-black-knight-satellite.jpg

ரேடியோ சிக்னல் : 

பிளாக் நைட் செயற்கைக்கோள் 50 ஆண்டுகளுக்கு மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் முகவர் கண்கானித்துக் அறிவித்துள்ளனர். 

18-1450421301-a2.jpg

சிறப்பு கவனம் : 

பல ஆண்டுகளாக விண்வெளி வளர்ச்சி யுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த பிளாக் நைட் விண்கலம் மீது சிறப்பு கவனம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

18-1450421304-as1wd2w.jpg

சமிக்ஞை இடைமறிப்பு : 

1899-ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா என்பவர் தான், பிளாக் நைட் விண்கலத்தின் சமிக்ஞையை இடைமறிப்பு செய்த முதல் மனிதர் என்ற புரளி கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது. 

அறிக்கை : 

மேலும் 1930-களில் இருந்தே பிளாக் நைட் விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெறுவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் அறிக்கை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

18-1450421306-black-knight-satellite.jpg

புகைப்படத்தில் சிக்கியது : 

1957-ஆம் ஆண்டு தான் மர்மமான பிளாக் நைட் விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது. 

18-1450421586-sts088-724-70as1-1024x1022

தற்செயல் : 

டாக்டர் லுயிஸ் கோராலோஸ் (Dr. Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட இசுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2) வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக பிளாக் நைட் சிக்கியது. 

18-1450425621-11.png

நிழல் ஆடுவதாக அறிக்கை : 

அதே 1957-ஆம் ஆண்டு இசுப்புட்னிக் 1 விண்கலத்தில் (Sputnik 1) இருந்த விண்வெளி வீரர்கள் அடையாளம் காணமுடியாத ஒன்று, போலார் சுற்று வட்டப்பாதையில் தங்களின் அருகே நிழல் ஆடுவதாக அறிக்கை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

18-1450425622-12.png

டைம்ஸ் நாளிதழ் :

மார்ச் 7-ஆம் அதேதி 1960-ஆம் ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழ் இந்த பிளாக் நைட் விண்கலம் பற்றி செய்தி வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

18-1450425624-13.jpg

முதல் வானிலை செயற்கைகோள் :

1957-ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் செலுத்த முனையத் தொடங்கி 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 

பிளாக் நைட் பற்றிய தகவல் : 

விண்ணில் செலுத்தப்பட்ட போலார் செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் பூமியை கண்கானித்தல் போன்றவைகளை செய்வதோடு, போலார் சுற்று வட்டப்பாதையில் அடிக்கடி தென்படும் பிளாக் நைட் பற்றிய தகவல்களையும் சேமிக்க உதவும் என்று நம்பப்பட்டது.

10 டன் எடை : 

பின் 1960-களில் மீண்டும் பிளாக் நைட் விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலம் ஆனது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்கும் என விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் கணிப்பு தெரிவித்தனர். 

18-1450425629-16.jpg

பிளாக் நைட் : 

அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான விண்கலமாய் (Heaviest Artificial Satellite) பிளாக் நைட் பார்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

18-1450425630-17.png

ட்ராக் : 

முதல் முறையாக ரேடாரில் பிளாக் நைட் சிக்கிய 7 மாதம் கழித்து 'ட்ராக்' செய்யப்பட்டு மீண்டும் பிளாக் நைட் புகைப்படத்தில் சிக்கியது. இதற்கு க்ரூமன் ஏர்கிராஃப்ட் கார்ப்ரேஷன் (Grumman Aircraft Corporation) மிகவும் உதவியது. 

18-1450425632-18.gif

டீகோட் :

பிளாக் நைட் விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்து பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான 'எப்சிலன் பூட்ச் ஸ்டார் சிஸ்டம்' (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

18-1450425633-19.png

நாசா : 

இறுதியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவும் 'பிளாக் நைட் சாட்டிலைட்' என்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

8000 வருடங்களாக எவர் கண்ணிலும் சிக்காத 'விசித்திரங்கள்', 'கூகுள் எர்த்'தில் சிக்கியது..!

சமீபத்தில், டிமிட்ரி டே (Dmitriy Dey) தன்னார்வ தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எகிப்து பிரமிட்களை கூகுள் எர்த் மேப் மூலம் தேடிய போது, சுமார் 8000 ஆண்டுகளாக எவர் கண்ணிலும் சிக்காத சில மர்மமான பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் தென்பட்டுள்ளது.

மேலும் இது சார்ந்த தகவல்களையும், கிடைக்கப்பெற்ற பண்டைய சூப்பர்ஸ்ட்ரக்சர்களையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

22-1450767790-1.png

கஜகஸ்தான் :

இந்த பண்டைய கால நிலப்படைப்புகள் முன்னாள் சோவியத் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள கஜகஸ்தானில் உள்ளன. 

22-1450767792-2.jpg

சதுரங்கள், சிலுவைகள் : 

இந்த நில படைப்புகளில் நூற்றுக்கணக்கான அடிகள் அளவிடும் சதுரங்கள், சிலுவைகள், கோடுகள் மற்றும் வளையங்கள் உள்ளன. 

22-1450767794-3.gif

வடிவியல் புள்ளிவிவரம் :

மேலும் நில படைப்புகள் ஆனது மகத்தான வடிவியல் புள்ளிவிவரங்களை உள்ளடக்கியது போல் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

22-1450767797-4.jpg

200 பண்டைய கால நில படைப்புகள் :

தீவிர ஆய்விற்க்கு பின் சுமார் 200 பண்டைய கால நில படைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

22-1450767799-5.jpg

அளவில் பெரியதாக :

கிடைக்கப்பற்ற நில படைப்புகளில் ஒன்றான மாபெரும் குறுக்கு வடிவ நில படைப்பானது எகிப்தில் இருக்கும் மாபெரும் பிரமிடை விட அளவில் பெரியதாக உள்ளது.

22-1450767800-6.jpg

கோட்பாடு :

இந்த சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் சார்ந்த துல்லியமான தெளிவு கிடைக்கப்படவில்லை என்றாலும் கூட, இவைகள் சூரிய மண்டலம் சார்ந்த அக்கால கோட்பாடுகளாய் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

22-1450767802-7.jpg

நாஸி :

ஹிட்லரின் நாஸிப்படையின் அடையாளமான ஸ்வஸ்திகா வடிவத்தில் இருக்கும் சூப்பர்ஸ்ட்ரக்சர் ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

22-1450767804-8.png

புதிர் :

சில சூப்பர்ஸ்ட்ரக்சர்கள் பற்றிய தெளிவு ஓரளவு கிடைத்தாலும், ஏனைய அனைத்துமே இன்றளவும் புதிராகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் போன் முடக்கிய சாதனங்கள்!

இன்றைய தொழில் நுட்பம் வழங்கிய சாதனங்களில், ஸ்மார்ட் போன் மட்டுமே நாம் ஏற்கனவே மேற்கொண்ட வாழ்க்கையின் சில பரிமாணங்களை மாற்றிப் போட்டுள்ளது. நாம் மிக ஆர்வத்துடனும், பெருமையுடனும் பயன்படுத்திய சாதனங்களை மூலைக்கு அனுப்பிவிட்டது. இதுவரை வேறு எந்த சாதனமும் இந்த அளவிற்கு மாற்றங்களைத் தந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, ஸ்மார்ட் போன் நம் வாழ்வில் இடம் பிடித்துவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு, அவர்களின் அன்றாட வாழ்வின் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறிவிட்டது.

சமூக ஊடகங்களுடன் இதனை இணைத்துப் பார்த்தால், இதுவரை சென்ற சந்ததியினர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளக் கையாண்ட வழிகளை அடியோடு புரட்டிப் போட்டது இந்த ஸ்மார்ட் போன் எனலாம். இதனை 'போன்' என அழைத்தாலும், நாம் போனாக இதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவுதான் எனலாம். ஸ்மார்ட் போன் பயன்பாட்டுப் பட்டியலில், அழைப்புகள் ஏற்படுத்த இதனைப் பயன்படுத்துவது இறுதியாகத்தான் உள்ளது. மற்ற செயல்பாடுகளே அதிகம் உள்ளன. எனவே, ஒரு சிலர், இதனை 'போன்' என்று சொல்வதைக் காட்டிலும், 'டேப்ளட்' அல்லது 'பேப்ளட்' என அழைக்கலாமே என்று கருத்து தெரிவிக்கின்றனர். 


இன்றைய பயனாளர்கள், குறிப்பாக இளைஞர்கள், இதனைப் போனாகப் பயன்படுத்தாமல், அப்ளிகேஷன்களைப் பதிந்து, அவற்றின் மூலம், குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து பரிமாறிக் கொண்டு, தங்கள் தகவல்கள் பரிமாற்றத்தை முடித்துக் கொள்கின்றனர். மேலும், இளவயதினர் ஆசைப்படுவது போல, ஒரே நேரத்தில், பலருடன் எளிதாக தகவல் தொடர்பு கொள்ள முடிகிறது. போனில் பேசும் போது, நம் முழு கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும். ஆனால், டெக்ஸ்ட் டைப் செய்து தகவல்களைப் பரிமாறும் போது, அந்த அளவிற்குக் கவனம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் தான், பல வீடுகள், தங்கள் தரைவழி தொடர்பில் உள்ள தொலைபேசி தொடர்புகளை ரத்து செய்து வருகின்றனர்.  ஸ்மார்ட் போன்கள் எந்த சாதனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்று இங்கு பார்க்கலாம்.
 


பொருள் பார்த்து போட்டோ எடுக்கும் கேமரா:


image.jpg


ஸ்மார்ட் போன்கள் முதலில் ஒழித்துவிட்ட சாதனம், நாம் ஏதேனும் ஒரு பொருளை அல்லது நபரை இலக்காகக் கொண்டு, பார்த்து போட்டோ எடுக்கும் Point and Shoot Camera தான். கடந்த பத்து ஆண்டுகளாகவே, இந்த கேமரா சிறிது சிறிதாக மறைந்து வந்தது. தற்போது ஸ்மார்ட் போன் வைத்துள்ள யாரும், இந்த வகை கேமராவில் எடுக்கும் போட்டோக்களைக் காட்டிலும் மிகவும் துல்லியமாக போட்டோ எடுக்க முடிகிறது. எனவே, தனியாக கேமரா ஒன்றை யாரும் வாங்கிப் பயன்படுத்துவதில்லை. இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவதாலேயே, இதனைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதில் புதிய சில வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வகை கேமராக்களில், இணையத் தொடர்பு கொள்ளும் வை பி இணைப்பினை இயக்க முடியும். நம் ஸ்மார்ட் போனையும், இந்த வகை Point and Shoot கேமராவினையும், வை பி வழியாக இணைத்து, கேமராவில் எடுத்துள்ள போட்டோக்களைப் பார்க்க முடியும். கேமராவினை தொலைவில் வைத்துவிட்டு, ஸ்மார்ட் போனில் உள்ள திரையை அழுத்துவதன் மூலம், போட்டோ எடுக்க முடியும். எடுத்த போட்டோவை, கேமராவிலிருந்து நேரடியாக, வை பி மூலம் சமூக இணைய தளங்களுக்கு அனுப்ப முடியும். இந்த வசதிகள் இருந்தால் தான், இந்த வகை கேமராக்கள் தற்போது விற்பனையாகும். இருப்பினும், இந்த வசதிகள் இருந்தாலும், சில ஆண்டுகளில் இவையும் மறைந்துதான் போகும் என கேமரா தயாரிப்பவர்கள் எண்ணுகிறார்கள்.

ஸ்மார்ட் போன்களில் போட்டோ எடுப்பது மட்டுமின்றி, அவற்றை எடிட் செய்திடும் வசதிகளும் இப்போது கிடைக்கின்றன. உடனடியாக, எடுத்த மற்றும் எடிட் செய்த போட்டோக்களை உடனே, நண்பர்களுக்கு அனுப்ப முடியும். அல்லது, க்ளவ்ட் சர்வர்களுக்கு அனுப்பி, அதன் வழியாக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம். போட்டோ மட்டுமின்றி, வீடியோ பதிவினையும் ஸ்மார்ட் போன்கள் திறனுடன் மேற்கொள்வதால், ஸ்மார்ட் போன்கள் கேமராவினை ஓரங்கட்டியதில் வியப்பில்லை.
 


மியூசிக் பிளேயர்கள்:

walkman_girl4.jpg



 வாக்மேன், ஐ பாட், எம்பி3 பிளேயர்கள் என ஒரு காலத்தில் நம் இளைஞர்கள் தங்கள் இடுப்பில் கட்டிக் கொண்டு, பாடல்களைக் கேட்டுக் கொண்ட காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இசை கேட்க விரும்புபவர்கள், அதற்கான பைல்களை, ஸ்மார்ட் போனில் பதிந்து, அல்லது மைக்ரோ எஸ்.டி. கார்ட்களில் பதிந்து, கேட்டு ரசிக்கின்றனர். விரும்பும் பாடல்களைக் கட்டணம் செலுத்தி, ஸ்மார்ட் போனில் டவுண்லோட் செய்து, ரசிப்பதும் இப்போது பழக்கமாகிவிட்டது. எனவே, மியூசிக் பிளேயர்கள் என தனியே ஒரு சாதனத்தைக் கொண்டு செல்வது என்பது இனி நடைமுறையில் இருக்காது.
 


பெர்சனல் கம்ப்யூட்டர்:


தங்கள் ஸ்மார்ட் போனையே, பெர்சனல் கம்ப்யூட்டராகப் பயன்படுத்தும் பழக்கம் தற்போது மெல்ல மெல்ல பரவி வருகின்றது. இமெயில், இணைய தேடல் மற்றும் கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன்கள் பயன் படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரில் பணம் முதலீடு செய்திட முடியாதவர்கள், கூடுமானவரை, தங்கள் ஸ்மார்ட் போனையே, கம்ப்யூட்டருக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர். வீடுகளில் வைத்து பயன்படுத்தும், ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இயக்கும் செயலிகள் அனைத்தையும் ஈடு செய்திடும் வகையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன. அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் அதிக திறன் கொண்டு பார்க்கும் வேலைகள் அனைத்தையும், ஸ்மார்ட் போனில் பார்க்க முடியாது என்றாலும், அன்றாட கம்ப்யூட்டிங் பணிகளை, நம்மால், ஸ்மார்ட் போனில் மேற்கொள்ள முடியும். எனவே, ஸ்மார்ட் போன்கள், ஓரளவிற்கு, பெர்சனல் ஹோம் கம்ப்யூட்டரை ஓரங்கட்டி விட்டன என்ற கூற்றும் உண்மையே.
 


டேப்ளட் பி.சி:


பல ஆண்டுகளாக உயர்ந்து வந்த டேப்ளட் பி.சி.க்கள் விற்பனை, தற்போது, அதிகத் திறன் கொண்ட ஸ்மார்ட் போன்களால் குறைந்து வருகிறது. அதாவது, மக்கள் டேப்ளட் பி.சி.க்களை வாங்கிப் பயன்படுத்தாமல் இல்லை. அவர்கள், சிறிய அளவிலான டேப்ளட் சாதனங்களை வாங்கி, ஸ்மார்ட் போன் போலப் பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போனின் பரிமாணம், மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்து, தற்போது 5 அல்லது 6 அங்குல அளவிலான திரை, ஸ்மார்ட் போன்களின் ஒரு நிச்சயிக்கப்பட்ட அம்சமாக அமைந்துவிட்டது. இந்த அளவிலான திரை கொண்ட ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் போலவே செயல்படுகின்றன. இவற்றைச் சட்டைப் பைகளில் வைத்து எடுத்துச் செல்லவும் முடியவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், கம்ப்யூட்டரில் வைத்து முன்பு விளையாடப்பட்ட விளையாட்டுகள் எல்லாம், ஸ்மார்ட் போன்களுக்கென வடிவமைக்கப்பட்டு, அதற்கான ஸ்டோர்களில் கிடைக்கின்றன

பத்திரமாக திரும்பி வந்த பல்கன் -9 ராக்கெட் !!

ராக்கெட்டுகள் என்றாலே நினைவுக்கு வருவது  அதிக நெருப்புடன் வெடித்து சிதறும் காட்சிகள் தான். இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மலைகளிலோ அல்லது கடலிலோ மனிதர்களை பதிக்காத அளவிற்கே தரையிறக்க வழிகள்  செய்யபட்டிருந்தது. ஆனால்  பல கோடிகணக்கில் செலவிட்டு விண்ணில்  ஏவப்படும் ராக்கெட்டுகளை  மறுமுறை பயன்படுத்தும் முயற்சியில்  தனியார் நிறுவனமான ஸ்பேஸ்-X சாதனை படைத்துள்ளது. சாதரணமாக ராக்கெட்டுகள் விண்வெளி பயணத்தை முடித்த பின்னர்   ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தவியலாது. ஆனால் தற்போது அந்த எண்ணத்தினை முறியடித்து ஸ்பேஸ்-X நிறுவனம் தற்போது ராக்கெட்டினை  தரையில் பாதுகாப்பான முறையில் செங்குத்தாக தரையிறக்கும் நோக்கில்  சாதித்து காட்டியுள்ளது.
 
இதுவரை அனைவரும் நினைத்திருந்த ஒரு எண்ணத்தை  மாற்றி  கழிவாக மட்டுமே போய்கொண்டிருந்த ஒரு பொருளை மாற்றி மீண்டும் பயன்படுத்தும் வகையில் செய்துள்ளது ஆச்சரியமே! ஏவுதளத்திலிருந்து மிகவும் கவனமாக புறப்பட்ட இந்த பல்கன் -9 இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு ராக்கெட்டின் முன் பகுதி அதன் அடுத்த பகுதியிலிருந்து பிரிந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. அதன் பின் ராக்கெட் நேர்குத்தாக தரையிறங்கியது.இதனால் விண்கலத்தினை மறுசுழற்சி செய்வதோடு மட்டுமல்லாமல்  புதிதாக வேறு ஒரு விண்கலத்தை  உருவாக்க அதிகமாக செலவு செய்யத் தேவையில்லை . பணம் மிச்சமாவதோடு    மட்டுமல்லாமல்  மனித உழைப்புகளும் சேமிக்கபடுகின்றன.
 
images-6.jpg
 
செங்குத்தாக களமிறங்கிய கலங்களில்  இது முதலாவதல்ல இதற்கு முன்  ப்ளூஆர்ஜின்  கலம்  வெற்றிகரமாக மேற்கு டெக்சாஸில்  களமிறங்கியது என்றாலும் அது  மிகவும்  சிறியது  என்பதோடு மட்டுமல்லாமல் அது விண்வெளிச் சுற்று வட்ட பாதை வரை தொட்டுவரவில்லை என்பது  ஒரு குறையே !  ப்ளூஆர்ஜின் விண்கலம் அமேசானின்  இணைய உரிமையாளரான ஜெட் பிராசசின்  அனுசரணையால் தொடங்கப்பட்டது. மேலும் தற்போது விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட பல்கன் -9   மற்றொரு இணையதள இலட்சாதிபதியான  ஹெலன் மாஸ்க்கின் ஆதரவுடன் அனுப்பப்பட்டது. இவர்களுக்கிடையிலான இந்த போட்டி விண்வெளி பயணத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகின்றன.

'டார்க் மேட்டர்' - விஞ்ஞானிகளையே குழப்பும்' விண்வெளி மர்மம்..!

அறிவியலும், தொழில்நுட்பமும் உச்சக்கட்ட வளர்ச்சி நிலையை அடைந்து விட்டது என்று நினைத்து கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தில் பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பெரும் புதிர் தான் - கரும்பொருள். உலகின் மாபெரும் மற்றும் அதிநவீன தொலைநோக்கிகளுக்குள் கூட 'அடங்காத' ஒன்று தான் கரும்பொருள் என்பது நிதர்சனம்.

கிரகங்கள், நட்சத்திரங்கள் என அண்டத்தில் கண்களுக்கு புலப்படக் கூடிய பொருட்களை காணக்கூடிய பொருட்கள் (visible matter) என்பர். அதே போன்று அண்டத்தில் கண்களுக்கு புலப்படாத விடயங்களை கரும்பொருள் என்பர் அதாவது 'டார்க் மேட்டர்' என்பர். அப்படியான காணக்கூடிய பொருட்களின் மீது ஏற்படும் புவியீர்ப்பு விசை மற்றும் பின்புல கதிர்வீச்சின் ஈர்ப்பு ஆகியவைகளால் ஊக்குவிக்கப்படுவது தான் கரும் பொருள் ஆகும். 

24-1450939559-1.jpg

சூப்பர் ஹார்ட் டு பைண்ட் :

அண்டத்தில் புலப்படும் பொருட்களை எளிமையான அறிவியல் மற்றும் தற்கால தொழில்நுட்பங்கள் கொண்டே ஆராய்ந்து விட முடியும். ஆனால், கரும்பொருள் என்பது அப்படியில்லை, 'ஸ்டில் சூப்பர் ஹார்ட் டு பைண்ட்' (Still Super hard to find) என்று நம்பப்படும் ஒரு விடாயமாகும்.


24-1450939562-2.jpg

வியப்பான விடயங்கள் :

அப்படியான கரும்பொருள் பற்றி, இதுவரை வானியலாளர்கள் மற்றும் வான்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட, வியப்பான விடயங்களைத்தான் அடுத்து தொகுக்கப்பட்டுள்ளது 

24-1450939568-4.jpg

உக்கிரமான வெடிப்பு :

13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உக்கிரமான ஒரு வெடிப்பின் மூலம் உருவானது தான் இந்த பிரபஞ்சம் (The Universe). அதன் அடிப்படையில் உருவானது தான் 'பிக் பாங்க்' கோட்பாடு (Big Bang Theory). 

24-1450939564-3.jpg

பிக் பாங்க் :

நாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே போகும் அந்த பிக் பாங்க் கோட்பாடின் கீழ் தான் கரும்பொருள் பற்றிய புதிரான முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

24-1450939571-5.jpg

84.5% :

டார்க் மேட்டர் ஆனது அண்டத்தின் 84.5% இடத்தைப் ஆட்க்கொண்டுள்ளது.

24-1450939573-6.jpg

ஒளியை உறிஞ்சிக்கொள்ளாது :

ஏனைய காணக்கூடிய விண்வெளிப் பொருட்களைப் போல் இல்லை, அதாவது டார்க் மேட்டர் ஆனது மின்காந்த சக்தியுடன் தொடர்பு கொள்ளாது. அதனால் டார்க் மேட்டர் ஆனது ஒளியை உறிஞ்சிக்கொள்ளாது, உமிழாது மற்றும் பிரதிபலிக்காது. 

24-1450939576-7.jpg

தொலை நோக்கிகள் :

ஆகையால், கண்களுக்கு புலப்படாத இந்த கரும்பொருள் ஆனதை காணக்கூடிய பொருட்கள் மீது செலுத்தும் ஈர்ப்பிலிருந்து தான் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர தொலை நோக்கிகள் மூலம் அல்ல.

24-1450939579-8.jpg

1932 :

கரும் பொருள் என்ற ஒரு விடயத்தின் இருப்பை முதன்முதலில் (1932) கண்டுப்பிடித்தவர் டச்சு வானியலாளர் ஆன ஜான் ஊர்ட் (Jan Oort) என்பவர் தான். 

24-1450939582-9.jpg

தாங்கிப்பிடித்து கொண்டிருக்கிறது :

மனித கண்களுக்கு புலப்படாத விடயங்கள் (கரும்பொருள்) தான் விண்மீன் திரள்களை தாங்கிப்பிடித்து கொண்டிருக்கிறது என்று டார்க் மேட்டர் பற்றிய தனது விளக்கத்தை அளிக்கிறார் - சுவிஸ் வானியலாளர் ஆன ஃப்ரிட்ஸ் ஸ்விகீ (Fritz Zwicky).

24-1450939599-10.jpeg

புல்லட் க்லஸ்டர் :

இரண்டு விண்மீன் திரள்கள் மோதிக்கொண்ட சம்பவமான புல்லட் க்லஸ்டர் (bullet cluster) தான் இதுவரை கிடைக்கப் பெற்ற கரும் பொருள் இருப்பின் ஆதாரங்களில் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

24-1450939601-11.jpg

ஈர்ப்பு வில்லை :

தூரத்தே இருந்து வரும் ஒளியை இடையில் உள்ள ஒரு பெரிய பொருளால் வளைக்கப்படும் சம்பவத்தை தான் ஈர்ப்பு வில்லை (Gravitational lens) என்பர்.

24-1450939607-12.jpg

அறிவியல் தொழில்நுட்ப முறை :

அந்த ஈர்ப்பு வில்லை (Gravitational lens) மட்டும் தான் இன்று வரை கரும்பொருள் பற்றி ஆராய கிடைத்துள்ள ஒரே அறிவியல் தொழில்நுட்ப முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 29 November 2015

காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை

காந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும். அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும். காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.

இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர். தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம். அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார். அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார். இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார். அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.

கருத்தினன் –> கிருத்தினன் –> கிருட்டினன் –> கிருஷ்ணன்.

குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது. மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே! துரியோதனன் என்பது “துர்+ஓதனன்” என்றிருந்து மருவியது. துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள். இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.

இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன். இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே. வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல. திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே! திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே!

இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை “காந்தம்” போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி. அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது. இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது. மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான்.

இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.
காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி. அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி –> சங்குனி –> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது. சம் என்றால் “அனைத்தையும்” அல்லது “ஒட்டுக்க” அல்லது “கூட்டாக” என்று பொருள். ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே!

பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும். ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது. அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள். அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி –> த்ரௌபதி –> திரௌபதி) திரௌபதி ஆனாள். அதாவது குரவர், கௌரவர் ஆனது போல. திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே! அவளே மீனாட்சியும் ஆகும். அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?

குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது. சகுனிக்கும் கோயில் உள்ளது. இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.
அதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும். காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே!
ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே! “ஆதி நற்புரம்” என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது. “ஆதிச்ச நல்லூரும்”, “ஆதி நற்புரமும்” ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“குரவர் சேர் தரை” தான் குருஷேத்திரம் ஆனது.
சேர் + தரை –> சேர் + த்ர –> சேர்த்ர –> ஷேத்ர –> ஷேத்ரம்.

மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம். குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் –> குரஷேத்ரம் –> குருஷேத்ரம் ஆனது. ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.

ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே! அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.

ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி. குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது. குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை. தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.

பிரெஞ்சுப் புரட்சியின் இரத்த சரித்திரம்

கம்யூனிசத்தை வெறுக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகளிடம், சில புள்ளிவிபரங்கள் எப்போதும் கைவசம் இருக்கும். ஸ்டாலின் கால ரஷ்யாவில், இறந்தவர் எத்தனை? மாவோ கால சீனாவில் இறந்தவர் எத்தனை? பொல் பொட் கால கம்போடியாவில் இறந்தவர் எத்தனை? இதற்கான விடைகளை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
 
 
சிலநேரம், ஸ்டாலின் கொன்ற ரஷ்யர்களின் தொகை, அன்றைய ரஷ்ய சனத்தொகையை விட அதிகமாக இருக்கலாம். அதே மாதிரி, மாவோவும் மொத்த சீன சனத்தொகையை விட அதிகமானோரை கொன்றிருக்கலாம். அப்படியான சந்தேகங்களை யாரும் எழுப்பக் கூடாது. அறிவுஜீவிகளின் மேதைமையை நாங்கள் சந்தேகப் பட முடியுமா?
 
அவர்களிடம், 1793 நடந்த பிரெஞ்சுப் புரட்சி கொன்ற, பிரெஞ்சு மக்களின் தொகை எவ்வளவு என்று கேட்டுப் பாருங்கள். பதில் தெரியாமல் திரு திரு என்று முழிப்பார்கள். பிரான்சில், 1793க்கும் 1794 க்கும் இடையிலான ஒரு வருடத்தில் மட்டும், மொத்தம் ஐந்து இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டார்கள்! சிலவற்றை “இனப்படுகொலை” என்ற வரையறைக்குள் அடக்கலாம். 
 
எந்தக் குற்றமும் புரிந்திராத, இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டனர்.
பிரான்சில் நடந்த புரட்சியானது, இன்றைய முதலாளித்துவ – லிபரல் அரசுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இன்று நாங்கள் “ஜனநாயகம்” என்று கூறிக் கொள்ளும் சிவில் சட்டம், அரசு நிர்வாகம், தேசிய இராணுவம், இன்னபிறவற்றை பிரெஞ்சுப் புரட்சி தான் தந்தது. பிரான்சில் புரட்சி நடந்திரா விட்டால், இன்று ஐரோப்பாவிலும், உலகம் முழுவதும் மன்னராட்சி நிலைத்து நின்றிருக்கும்.
 
பிரான்சில் புரட்சி நடந்தது பற்றி மட்டுமே, பல வரலாற்று நூல்களில் எழுதப் பட்டுள்ளது. ஆனால், புரட்சிக்குப் பிறகு என்ன நடந்தது என்ற விபரத்தை எங்கேயும் காண முடியாது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர் என்ன நடந்ததோ, அதை விட மிகவும் மோசமான சம்பவங்கள் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் நடந்துள்ளன. ஏனெனில், புரட்சி என்பது மாலை நேர தேநீர் விருந்து அல்ல.
 
ரஷ்யாவில் நடந்த புரட்சியில், தலைநகரான சென் பீட்டர்ஸ்பேர்க் மட்டுமே, லெனின் தலைமையிலான சமூக ஜனநாயக போல்ஷெவிக் கட்சியினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தது. ரஷ்யாவின் பிற பாகங்களில் மென்ஷெவிக் மற்றும் சார் மன்னனுக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் நிலவியது. அதனால், அங்கு ஓர் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த விபரங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், அதே மாதிரியான வரலாற்று நிகழ்வுகள், பிரான்சிலும் நடந்தன என்ற விபரம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
 
பிரான்சில், தலைநகர் பாரிஸ் மட்டுமே புரட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தலைநகருக்கு வெளியே பல இடங்களில், மன்னருக்கு விசுவாசமான படையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வேறு சில அரசியல் சக்திகளும், பாரிஸ் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கொண்டிருந்தன.
 
பிரான்சின் தெற்குப் பகுதிகளில், கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமான படையினரும், மேற்குப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு விசுவாசமான படையினரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். கிழக்குப் பகுதிகளில் சற்று வித்தியாசமான கிளர்ச்சி நடந்தது. பிரெஞ்சுப் புரட்சிக்கு ஆதரவான, ஆனால் பாரிஸ் அரசுக்கு எதிரான சமஷ்டிவாதிகளின் கை ஓங்கி இருந்தது.
 
பிரெஞ்சுப் புரட்சியானது, வெகு விரைவில் எதிர்ப்புரட்சியாளர்களினால் தோற்கடிக்கப் படும் அபாயம் நிலவியது. அதனால், மக்ஸ்மில்லியன் தெ ரொபெஸ்பியர் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அவர்கள் அதனை, “கொடுங்கோன்மைக்கு எதிரான சுதந்திரத்தின் சர்வாதிகாரம்” என்று நியாயப் படுத்தினார்கள்.
 
சோவியத் யூனியனை ஸ்தாபித்த கம்யூனிசப் புரட்சியாளர்கள், “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்” நிலைநாட்டப் பட்டதாக கூறிய பொழுது, எத்தனை பேர் அதைப் பரிகசித்தார்கள்? சர்வாதிகாரம் என்ற சொல்லை சுட்டிக் காட்டியே எம்மைப் பயமுறுத்தியவர்கள் எத்தனை? அதே நேரம், பிரான்ஸ் நிலைநாட்டிய “சுதந்திரத்தின் (பூர்ஷுவா வர்க்க) சர்வாதிகாரம்” அவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எப்படி?
 
அது என்ன “சுதந்திரத்தின் சர்வாதிகாரம்”? இதைக் கேள்விப்படும் நீங்கள், “சர்வாதிகாரம் சுதந்திரத்திற்கு எதிரானது” என்றெண்ணி சிரிக்கலாம். உங்கள் எண்ணம் தவறானது. நாங்கள் நவீன உலகின் மனிதர்கள் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறோம். 
 
அன்றைய காலகட்டம் வேறு. புரட்சிக்கு முன்னர், மன்னர் குடும்பமும், நிலப்பிரபுக்களின் குடும்பங்களும் மட்டுமே சுதந்திரத்தை அனுபவித்து வந்தன. குடி மக்களுக்கு உரிமைகளே இருக்கவில்லை. அதனால், குடிமக்களுக்கான சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கு சர்வாதிகாரம் இன்றியமையாதது என்று கருதப் பட்டது.
 
நமது காலத்தில், இன்றைய சமூகத்தில் வசதியான வாழ்க்கை வாழும், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், அரசு ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் போன்றோர் நடுத்தர வர்க்கம் (பிரெஞ்சு மொழியில்: பூர்ஷுவா வர்க்கம்) என்று அழைக்கப் படுகின்றனர். அவர்கள் ஏதோ ஒரு வகையில், நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தெரிந்து வைத்துள்ளனர்.

புரட்சிக்கு முந்திய ஐரோப்பாவில், நடுத்தர வர்க்கத்தினர் வறுமையில் வாடினார்கள்.  நமது காலத்தில், நம் தாயகத்தில் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, அன்றிருந்த ஐரோப்பிய மருத்துவர்களுக்கு கிடைக்கவில்லை. வைத்தியம் பார்ப்பது ஒரு கீழ்த்தரமான, வருமானம் குறைவாகக் கிடைத்த தொழிலாகக் கருதப் பட்டது. ஏனையோரைப் பற்றி இங்கே சொல்லத் தேவையில்லை.

பிரெஞ்சுப் புரட்சியானது, மேற்குறிப்பிட்ட நடுத்தர வர்க்க (பூர்ஷுவா) மக்களின் ஆதரவில் தான் வெற்றி பெற்றது. நிலப்பிரபுக்களுக்கு எதிரான அவர்களது கோபம், அரச மட்டத்திலும் எதிரொலித்தது. சோவியத் யூனியனில், ஸ்டாலின் காலத்தில் பிரபுக்கள், முதலாளிய, மேட்டுக்குடி வர்க்கங்களை சேர்ந்த எல்லோரும் சந்தேகப் பட்டு கொல்லப் பட்டதும், சிறையில் அடைக்கப் பட்டதும் தெரிந்திருக்கும்.
 
பிரான்சிலும் அதே தான் நடந்தது. பிரபுக்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமல்ல, பிரபு குலத்தில் பிறந்த அத்தனை பேரும் சந்தேகிக்கப் பட்டனர். கத்தோலிக்க மதகுருக்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் சந்தேகிக்கப் பட்டனர். புரட்சிப் படைகளின் கைகளில் அவர்கள் அகப்பட்டால் மரணம் நிச்சயம். யாருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப் படவில்லை. கைது செய்யப் பட்டவர்கள் ஒன்றில் விடுதலை செய்யப் பட்டனர், அல்லது கொல்லப் பட்டனர்.
1793 ஆம் ஆண்டு, பிரெஞ்சுப் புரட்சியை பாதுகாப்பதற்காக “பொதுநல கமிட்டி” ஒன்று உருவாக்கப் பட்டது. பாரிசில் அதுவே “ஆளும் கட்சியாக” இருந்தது. முன்னாள் வழக்கறிஞரான ரொபெஸ்பியர் அதன் தலைவராக இருந்தார். உண்மையில் ரொபெஸ்பியரின் கையில் தான் அதிகாரம் குவிந்திருந்தது. பிரபுக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் ஒடுக்குமுறையில் இருந்து, மக்களை விடுதலை செய்வதே தனது இலட்சியம் என்றவர், தானே ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொண்டார். அதனால் தான், புரட்சியாளர்களில் ஒரு பிரிவினரும் அவருக்கு எதிராக திரும்பினார்கள்.
 
ஸ்டாலின் காலத்தில், “மக்கள் விரோதிகள்” என்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர். பிரான்சில் ரொபெஸ்பியர் காலத்திலும் அதே தான் நடந்தது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள், ஒன்றில் “துரோகிகள்” அல்லது “மக்கள் விரோதிகள்” என்று முத்திரை குத்தப் பட்டார்கள். என்ன விலை கொடுத்தேனும் எதிர்ப்புரட்சியாளர்களிடம் இருந்து புரட்சியை பாதுகாக்க வேண்டும் என்பது ரொபெஸ்பியரின் குறிக்கோள்.
 
“ஒரு மக்கள் அரசு, தார்மீக ஒழுக்கத்தாலும், பயங்கரவாதத்தாலும் நிலைநிறுத்தப் படும். குறுகிய காலத்திற்குள் எழுந்து நிற்பதற்கு பயங்கரவாதம் நியாயப்படுத்தப் படலாம்…” என்பது ரொபெஸ்பியரின் வாதம். “நாங்கள் துரோகிகளை மட்டுமல்லாது, அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவோம். வாள் மட்டுமே மக்களையும், அவர்களின் எதிரிகளையும் பிரித்து வைக்கும்….” இது 1793, செப்டம்பர் 5 அன்று ரொபெஸ்பியர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி.
 
ரொபெஸ்பியரின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஜான் பால் மாராட் வெளியிட்ட “மக்களின் நண்பன்” (L’ Ami du Peuple) பத்திரிகை, பின்வருமாறு தலையங்கம் தீட்டியது: 
 
“துரோகிகளின் இரத்தத்தை ஆறாக ஓட வைப்போம். எமது நாட்டை மீட்பதற்கு அதுவே ஒரேயொரு வழி!”

ட்விட்டர் ஒளித்து வைத்திருக்கும் சுவாரசியங்கள்..!

ட்விட்டர் குருவியில் ஏறிப் பறந்து ட்விட் செய்யாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்க்கு பயன்பாட்டாளர்களை கொண்டது ட்விட்டர்.

பேஸ்புக்குக்கு அடுத்த படியாக, அதிகம் பயன்படுத்தபடும் சமூகவலைத்தளமாக இருப்பினும், நமக்கு பேஸ் புக்கை பற்றித் தெரிந்த அளவு, ட்விட்டர் பற்றி தெரியாது என்றே கூற வேண்டும். இனி தெரிஞ்சுக்காம இருக்க வேண்டாம் வாங்க..

12-1434107436-01statusofjack.jpg

முதல் ட்விட்

முதல் ட்விட் செய்யப்பட்டது மார்ச் 21, 2006. செய்தவர் ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சே.

12-1434107438-02libraryofcongress.jpg

ட்விட்டர் பதிவு

எல்லா ட்விட்களும், ட்விட்டர் சர்வார்களில் பதிவாகும், அதுபோலவே லைப்ரரி ஆஃப் காங்ரஸிலும் பதிவாகும்.

12-1434107440-03-500million.jpg

500 மில்லியன் ட்விட்ஸ்

ஒரு நாளைக்கு 500 மில்லியன் ட்விட்ஸ் செய்யப்படுகிறது.

12-1434107441-04-name.jpg

பெயர் பரிணாமம்

முதலில் இந்நிறுவனத்தின் பெயர் ஓடியோ, பின் ஸ்டேட்.அஸ் (stat.us) என்று மாறி பின் ட்விட்ட்ர் (twttr) என்றாகி, பின்தான் ட்விட்டர் என்றானது.

X5T5SIXS.png

ட்விட்டர் பறவை

ட்விட்டரின் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி.

12-1434107444-06-tweetname.jpg

முதலில் ஸ்டேடஸ் அப்டேட்ஸ்

முதலில் ட்விட் என்ற வார்த்தை இப்போது தான் பயன்படுத்தப்படுகிறது, முதலில் ஸ்டேடஸ் அப்டேட்ஸ் என்றுதான் இருந்தது.

12-1434107446-07-pocky-cake.png

கின்னஸ் சாதனை

24 மணி நேரத்தில் போக்கி என்ற ஒரு நிறுவனத்தின் பெயரை அதிகமானோர் ட்விட்டரில் பயன்படுத்தியது, ஒரு கின்னஸ் சாதனையானது. பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 3,710,044.

12-1434107448-08-recordtweets.jpg

ட்விட்ஸ் அலை

ஒரு நொடியில் 143,199 ட்விட்ஸ் செய்யப்பட்டதே இதுவரையில் உள்ள ட்விட்டர் சாதனையாகும்.

12-1434107449-09-katy-perry-wallpaper.jp

ட்விட்டர் சாம்பியன்

கேட்டி பெர்ரி தான் தற்போதைய ட்விட்டர் சாம்பியன். இவரை 70,148,900 பேர் பின்தொடர்கின்றனர். இரண்டாம் இடத்தில் ஜஸ்டின் பைபர், மூன்றாம் இடத்தில் பராக் ஒபாமா.

12-1434107451-10-obama.jpg

1 மில்லியன் பேர்

ட்விட்டரில் இணைந்த 23 மணி நேரம் 22 நிமிடங்களில், 1 மில்லியன் பேரை பின் தொடர செய்தார் பராக் ஒபாமா. இது கின்னஸ் சாதனையாகிற்று.